அந்த ஒரு காரணத்தால் நயன்தாராவை வேண்டாம் என்ற பிரபல முன்னணி இயக்குனர்..!

November 11, 2022 at 10:00 am
pc

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. பலஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக இருந்து வரும் நயன்தாரா தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பிரபலமான நடிகையாக இருக்கின்றார். மேலும் தற்போது ஷாருக்கான் நடிப்பில் அட்லீயின் இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்தில் நாயகியாக நடித்து வருகின்றார் நயன்தாரா.

இப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார். இந்நிலையில் அவரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாது தன் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார் நயன்தாரா.

தற்சமயம் நாயகியாக மட்டும் நடிக்காமல் கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களிலும், சோலோ நாயகியாகவும் நடித்து வரும் நயன்தாரா கைவசம் பல படங்களை வைத்துள்ளார். 
இந்நிலையில் தற்போது பல இயக்குனர்கள் நயன்தாராவின் கால்ஷீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நயன்தாராவை பிரபலமான இயக்குனர் ஒருவர் நிராகரித்ததாக தகவல் வந்துள்ளது.

அவர் வேறு யாருமில்லை நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தான். பார்த்திபன் இயக்கத்தில் வெளியான குடைக்குள் மழை என்ற படத்தில் முதன் முதலில் நயன்தாரா தான் நடிப்பதாக இருந்ததாம்.

ஆனால் பார்த்திபன் சொன்ன தேதியில் நயன்தாராவால் பார்த்திபனை சந்திக்க முடியவில்லையாம். எனவே அப்படத்தில் நயன்தாரா நடிக்க முடியாமல் போக அவருக்கு பதிலாக மதுமிதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website