ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நாளை விடுமுறை!
ஆடிப்பெருக்கு விழா தமிழகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தர்மபுரி, ஈரோடு, நாமக்கல்,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில் 27ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு மட்டும் செப்டம்பர் 17ஆம் தேதி பணி நாளாக செயல்படும்.