ஆண் நண்பர் பேசாததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!!
சென்னை அடுத்து வளசரவாக்கம், பழனியப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணராவ். இவரது மகள் அரிதா ராஜேஸ்வரி (25), பட்டப்படிப்பு முடித்த இவர் வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் அரிதா ராஜேஷ்வரி உடலை கைப்பைற்றி விசாரணை நடத்தினர். இதில், அரிதா ராஜேஸ்வரி கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மதுமோகன் என்பவரிடம் நண்பராகப் பழகி வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக அரிதா ராஜேஸ்வரியுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் மன மிகுந்த மன உளைச்சலிலிருந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், தற்கொலைக்கு முன்பு அரிதா ராஜேஷ்வரி எழுதிய தற்கொலை கடிதமும் போலிஸாருக்கு கிடைத்துள்ளது.