ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதனால் கிடைக்கும் அற்புத நன்மைகள் ..
ழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களின் ஒன்று தான் ஆப்பிள்.
இதில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன.
அதனால் தான் இதனை மருத்துவர்கள் தினம் ஒன்று சாப்பிட வழியுறுத்துகின்றனர்.
அதிலும் இதனை தோலுடன் சாப்பிடுவது பல நன்மைகளை வழங்குகின்றது.
அந்தவகையில் தற்போது ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதனால் கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- ஆப்பிளின் தோலுடன் சாப்பிடுவது நுரையீரலை சீராக செயல்பட வைக்கிறது.
- ஆப்பிளின் தோலுடன் சாப்பிடுவது மூளைச் செல்கள் பாதிப்படைவதையும், ஞாபக மறதி ஏற்படுவதையும் தடுத்து, ஆர்வத்தை அதிகரித்து, ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
- நீரிழிவு நோயாளிகள் ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடுடன் இருக்கும்.
- ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் கண் புரை ஏற்படும் அபாயம் குறையும். முக்கியமாக கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.
- ஆப்பிளின் தோலில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கும்.
- தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால், பல் சொத்தை ஏற்படுவது தடுக்கப்பட்டு, பற்கள் வெள்ளையாகவும், வாயில் எச்சிலின் உற்பத்தி அதிகரித்து வாய் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
- கர்ப்பிணிகள் ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால், ஆப்பிள் தோலில் உள்ள ஃபோலிக் ஆசிட் மற்றும் இரும்புச்சத்தினால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
ஆப்பிளின் தோலுடன் சாப்பிட்டால், எலும்புகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். முக்கியமாக மூட்டு வலி உள்ளவர்கள் ஆப்பிளை சாப்பிடுவது நல்லது.
எடையைக் குறைக்க நினைப்போர் ஆப்பிளை தோல் நீக்காமல் அப்படியே சாப்பிட வேண்டும்.
ஆப்பிளின் தோலுடன் சாப்பிடுவது உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய்களின் தாக்கம் குறையும்.
ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டு வந்தால், கல்லீரல், மார்பகம், குடல் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுக்கலாம்.
- ஆப்பிளை தோலுடன் உட்கொள்வதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்துக்களால், உயர் கொலஸ்ட்ராலால் ஏற்படும் மாரடைப்பு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.