இத்தாலியில் ஒரே நாள் இரவில் கொட்டி தீர்த்த கனமழை: 9 பேர் பலி!

September 16, 2022 at 7:29 pm
pc

மத்திய இத்தாலியில் கொட்டி தீர்த்த கனமழை.

ஒன்பது பேர் உயிரிழந்ததுடன், நான்கு பேரை மீட்பு படையினர் தேடி வருவதாக அறிவிப்பு.

மத்திய இத்தாலியில் ஒரே நாள் இரவில் பெய்த கனமழையில் ஒன்பது பேர் வரை உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய இத்தாலியின் மார்ச்சே பகுதியில் ஒரு வருடத்தின் மூன்றில் ஒரு பங்கு மழை, ஒரே நாள் இரவில் முழுவதுமாக கொட்டி தீர்த்ததை தொடர்ந்து, ஏற்பட்ட வெள்ளத்தில் ஒன்பது பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

மார்ச்சே பகுதியில் இரவு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் சுமார் 400 மில்லி மீட்டர் மழை பெய்ததாக நாட்டின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக Serra Sant’Abbondio பகுதி மேயர் தெரிவித்துள்ள கருத்தில், இந்த கனமழை நிலநடுக்கம் போன்று இருந்தது என தெரிவித்துள்ளார்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 300 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், காணாமல் போன நான்கு பேரை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

மார்ச்சின் பிராந்திய அரசாங்கத்தின் சிவில் பாதுகாப்பு தலைவர் ஸ்டெபானோ அகுஸ்ஸி, எங்களுக்கு சாதாரண மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டது, ஆனால் முன்னறிவிக்கப்பட்டதை விட மழை மிகவும் வலுவாக இருந்தது, இதுபோன்ற எதையும் யாரும் எதிர்பார்க்கவில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website