இந்தியா – பாகிஸ்தான் இன்று மீண்டும் மோதல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது. தற்போது, 2-வது முறையாக மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரையில் டாப் ஆர்டர் பேட்டிங் இன்னும் வலுப்பெறவில்லை. கே.எல்.ராகுலுக்கு பதிலாக தீபக் ஹூடாவை களமிறக்கக்கூடும்.
சூர்யகுமார் யாதவிடமிருந்து இன்று ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகியுள்ளதால் அவரது இடத்தில் அக்சர் படேல் களமிறங்க வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பதில் தீவிரம் காட்டக்கூடும். மேலும் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் தரக்கூடும்.
இன்றைய மேட்சில் இந்தியாவுக்கு வெற்றியா? தோல்வியா? உங்கள் கணிப்பை கமெண்டில் பதிவிடவும்.