இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு வெளிநாட்டில் மரண தண்டனை விதிப்பு
கத்தாரில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சட்ட ரீதியாக எதிர்கொள்வதாக
குறித்த தகவலை உறுதி செய்துள்ளதுடன், இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கத்தாரின் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்கும் ஒரு தனியார் நிறுவனமான தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் தொடர்புடைய முன்னாள் கடற்படை வீரர்கள் பணிபுரிந்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்களின் ஜாமீன் மனுக்கள் பல முறை நிராகரிக்கப்பட்டது. அத்துடன் கத்தார் அதிகாரிகளால் அவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது. இன்று, கத்தார் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.
மரண தண்டனை குறித்த தகவல் வெளியனதும், இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
தீர்ப்பால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம் மேலும் விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் எனவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சட்டக் குழுவுடன் தொடர்பில் இருக்கிறோம், மேலும் அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.