இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17400 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்!!

February 13, 2023 at 11:36 am
pc

நடப்பு ஆண்டில் உலகம் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளதால் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றன. குறிப்பாக, தொழில்நுட்ப துறையில் அதிகளவிலான ஊழியர்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலை இழந்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், ட்விட்டர், அமேசான், ஐபிஎம் போன்ற பல்வேறு மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளன. இதுபோக அடுத்தகட்டமாக உள்ள நிறுவனங்களும், நடுத்தர நிறுவனங்களும் கூட ஊழியர்களை சத்தமில்லாமல் ஆட்குறைப்பு செய்துவிட்டன.

இந்நிலையில், நடப்பு பிப்ரவரி மாதத்தில் மட்டும் இதுவரை உலகம் முழுவதும் தொழில்நுப்ட துறையை சேர்ந்த 17,400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்தியாவிலும் பல ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

2023ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இதுவரை சுமார் 340 நிறுவனங்கள் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளன. ஆட்குறைப்பு தளர்த்தப்படுவதற்கான அறிகுறிகள் இல்லாததால் பணிநீக்கம் மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என தெரிகிறது.

பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சத்தால், வரும் நாட்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் இன்னும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியிலும் ஆட்குறைப்பு தீவிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சத்தால், வரும் நாட்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் இன்னும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியிலும் ஆட்குறைப்பு தீவிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website