இந்த பொருட்களை தானமாக கொடுத்தால் சகல செல்வங்களும் உங்கள் வீடு தேடி வரும்…
இறைக்க இறைக்கத்தான் கிணற்றில் நீர் ஊரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
நாம் கற்ற கல்வியை பிறருக்கு சொல்லிக்கொடுத்தால் நம்முடைய அறிவு விருத்தி அடையும் அதுபோல நாம் சில பொருட்களை தானமாக கொடுத்தால் நம்முடைய செல்வம் விருத்தி அடையும்.
தானம் கொடுப்பவர்களை இறைவனுக்கு மிகவும் பிடிக்குமாம் எனவேதான் தானம் செய்பவர்களின் வீட்டில் செல்வம் மேலும் மேலும் பெருகுகிறது.
பெண்கள் கையால் செய்யக்கூடிய காரியம் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.
இதனால் தான் எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அதை வீட்டில் இருக்கும் பெண்கள் கையால் செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள்.
பெண்கள் மகாலட்சுமியின் அம்சம் எனவே தான் வீட்டு பெண்களின் கைகளில் இருந்து தினம் ஒரு ரூபாயாவது ஆண்கள் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வார்கள்.
அப்படி செய்வதன் மூலம் வருமானம் அதிகரிக்கும் என்றும் கூறுவார்கள்.
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் தங்க நிறத்தில் உள்ள பொருட்களை தானமாக தருவது நல்லது. மஞ்சள், கடலைப்பருப்பு, சுண்டல் போன்றவைகளை தானமாக தருவதன் மூலம் செல்வ வளம் பெருகும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் விரைவில் செல்வம் சேரும்.
ரிஷப ராசிக்காரர்கள் தேனை தானமாக தரலாம்.
செவ்வாய் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்வதன் மூலம் செல்வம் பெருகும்.
ஏழை பெண்களின் திருமணத்துக்கு முடிந்த பொருட்களை தானம் செய்வதன் மூலம் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.
மிதுன ராசிக்காரர்கள் வெண் பொங்கல் சமைத்து முடிந்த அளவுக்கு ஏழைகளுக்கு தானம் கொடுங்கள்.
அனைத்து விதமான செல்வமும் தேடி வரும்.
ஏழை மாணவர்களுக்கு கல்விக்கு பணம் தானம் கொடுப்பதும் நன்மை தரும்.
சிம்ம ராசிக்காரர்கள் ஞாயிறு கிழமைகளில் தாமிரம், கோதுமை தானமாக தரலாம்.
ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுக்க நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
கன்னி ராசிக்காரர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
ஏழை மாணவர்களுக்கு கொப்பி, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்க முன்னேற்றம் அதிகரிக்கும்.
துலாம் ராசிக்காரர்கள் பசு நெய்யை தானமாக வாங்கிக் கொடுக்கலாம்.
ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுப்பது உங்கள் வீட்டு வாரிசுகளுக்கு நல்லது.
சகல செல்வங்களும் உங்கள் வீடு தேடி வரும்