இனி எப்பவும் வாய் துர்நாற்றம் வராமல் இருக்க சிம்பலான டிப்ஸ் …..!!
நம்மில் பலரும் வாய் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதில் சங்கடமான விஷயம் என்னவென்றால் அவர்கள் பேசும் எதிரில் இருக்கும் நபர் முகம் சுலிக்கும் அளவிற்கு செல்வது தான். பெரும்பாலும் வாய்துர்நாற்றம் அவர்களை விட எதிரில் இருப்பவர்கள் தான் எளிதில் நுகரப்படுகிறது. அந்த மாதிரியான சமயத்தில் நீங்கள் இருந்தால் என்ன நினைப்பீர்கள் நன்றாக பல் துலக்கவில்லை என்று தான் நினைப்பீர்கள்.
ஆனால், உண்மையில் சுத்தமாக பல் துலக்கினாலும் வாய் துர்நாற்றம் வரும். காரணம் வாய் துர்நாற்றம் என்பது வாயோ மட்டும் தொடர்புடையது கிடையாது. வாய்துர்நாற்றம், உணவு குழல், வயிற்றில் பிரச்சனை என பல காரணத்தால் ஏற்படுகிறது. இந்த சங்கடமான பிரச்சனையில் இருந்து உங்களை விடுவிப்பது எளிது. சில குறிப்புகளை நீங்கள் பின்பற்றினாலே வாய்துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.
வாய் துர்நாற்றத்தைக் குறைக்க சில வழிகள்:
வாய் துர்நாற்றம் போக சுவிங்கம் அல்லது அதற்கென விற்கும் பிரத்யேக மிட்டாய்களை வாங்கி பயன்படுத்தலாம்.
இரவில் சாப்பிட்ட பிறகு பல் துளைக்கிவிட்டு 3 மணி நேரம் கழித்து தூங்கச்செல்ல வேண்டும்.
வெங்காயம், பூண்டு போன்ற உணவுகளை தவிர்க்கலாம்.
மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கத்தை கைவிடுவது.
மிகவும் முக்கியமானது, அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இது வயிற்றில் இருக்கும் நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது
வாய் துர்நாற்றம் நீங்க டிப்ஸ்
வாய் துர்நாற்ற பிரச்சனைக்கு சிறந்த மருந்து என்றால், அது துளசி தான். தினமும் எத்தனை முறை வேண்டுமானாலும் சிறிதளவு துளசியை பறித்து வாயில் போட்டு மெதுவாக மென்று வர வாய்துர்நாற்றம் காணாமல் போய்விடும்.
தினமும் சாப்பிடுவதற்கு முன்பு சிறிதளவு சோம்பை வெறும் வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிடுங்கள். இதனால், உணவு நன்றாக ஜீரணம் ஆகும், வாய் துர்நாற்றமும் வராது.
சாப்பிட்ட பிறகோ அல்லது மற்ற சமயங்களிலோ ஒரே ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் வாய் துர்நாற்றம் படிபடியாக குறைந்து விடும்.
தினமும் சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு அருந்துங்கள். இவ்வாறு செய்வதால் துர்நாற்றம் வருவதை முற்றிலும் தடுக்கலாம். அல்லது உணவு சாப்பிட்ட பிறகு ஆரஞ்சு பழத்தையும் சாப்பிடலாம்.
பேக்கிங் சோடாவை வாங்கி, சிறிதளவு தண்ணீரில் கலந்து தொடர்ந்து வாய் கொப்பளித்து வந்தாலும் வாய்துர்நாற்றாத்தில் இருந்து தப்பிக்கலாம்.