இனி நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்த விஜய்..ரசிகர்கள் அதிர்ச்சி..!
நடிகர் விஜய் இன்று இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு நட்சத்திரம். இவரின் சுமாரான படங்கள் கூட வசூலில் சக்கைபோடு போடும். சூப்பரான படம் என்றால் சொல்லவே வேண்டாம். அதன் வசூல் இந்தியளவில் சாதனை படைக்கும்.
சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அதன் வசூலை பொறுத்தவரை வெற்றிப்படமாகவே அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் விஜய் கொண்ட ரசிகர்கள் தான்.
உலகளவில் ரசிகர்களை கொண்ட விஜய் தற்போது தளபதி 66படத்தில் நடித்து வருகின்றார்.
வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க சரத்குமார், ஷ்யாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு அடுத்தாண்டு பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனை படக்குழு அதிகாரபூர்வமாகவும் அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் நடிகர் விஜய்யை பற்றி பேசியுள்ளார்.
ஆரம்பகாலகட்டத்தில் விஜய்யின் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக வேலை செய்துள்ளார் விஜய் மில்டன்.
அப்போது விஜய்யுடன் அவருக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஒரு நாள் விஜய் விஜய் மில்டனிடம் நடிப்பதில் இருந்து விலகப்போவதாக கூறியதாக விஜய் மில்டன் கூறியுள்ளார்.
படப்பிடிப்பில் ஒரு நாள் விஜய் 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு நான் நடிக்கப்போவதில்லை என்று சொன்னாராம்.
ஆனால் தற்போது இருக்கும் சூழலில் அவர் இந்த முடிவை இனி எடுக்கவே மாட்டார் எடுக்கவும் முடியாது என விஜய் மில்டன் கூறியது குறிப்பிடத்தக்கது.