இரண்டாம் திருமணத்திற்காக… பொண்டாட்டி மீதே பொய் வழக்கு தொடுத்த இமான்… அம்பலமான உண்மை!
இசையமைப்பாளர் டி இமான் முன்னாள் மனைவி மீது பொய் வழக்கு தொடுத்த தகவல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் டி இமான் தனது முன்னாள் மனைவி மீது பொய் வழக்கு தொடுத்தது அம்பலமாகியுள்ளது.
டி இமான்
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி இமான். 2002ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியா தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். டி இமான் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஏராளமான விருது
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களுக்கும் இமான் இசையமைத்துள்ளார். இமான் தேசிய விருது, பிலிம் ஃபேர் விருது என ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசும் அவரை கவுரவித்துள்ளது.
இரண்டு பெண் குழந்தைகள்
டி இமான், மோனிகா ரிச்சர்ட் என்பவரை கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு வெரோனிகா மற்றும் ப்ளெசிக்கா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திருமணம் ஆகி 12 ஆண்டுகள் கழித்து கடந்த டிசம்பர் மாதம் இருவரும் விவாகரத்து பெற்று விட்டதாக டி இமான் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.
எமலி உபால்டு
இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் விவாகரத்தான 4 மாதங்களில் இசையமைப்பாளர் டி இமான் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். மறைந்த பிரபல ஓவியரும் டிசைனருமான உபால்டு மற்றும் சந்திரா உபால்டு தம்பதியரின் மகள் எமலி உபால்டை இரண்டாவது திருமணம் செய்துள்ளார் டி இமான்.கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களின் திருமணம் நடைபெற்றது.
இமான் வழக்கு
இந்நிலையில் இமான் அவரது முன்னாள் மனைவியான மோனிகா ரிச்சர்டு மீது பொய் புகார் அளித்து வழக்கு தொடுத்தது அம்பலமாகியுள்ளது. அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது முன்னாள் மனைவி மோனிகா, குழந்தைகளின் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக பொய்யான தகவலை கூறி புதிய பாஸ்போர்ட் எடுக்க விண்ணப்பம் செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டி இமான் வழக்கு தொடர்ந்தார்.
வீடு மாறும் போது
இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில் டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா இதுகுறித்து பேசியுள்ளார். டி இமானிடம் குழந்தைகளின் பாஸ்போர்ட்டை தரும்படி கேட்டுள்ளார் மோனிகா. ஆனால் வீடு மாறும் போது பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக கூறியுள்ளார் இமான். இதனால்தான் புதிய பாஸ்போர்ட்டுக்கு தான் விண்ணப்பித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொய் அம்பலம்
இதன்மூலம் இமான் முன்னாள் மனைவி மோனிகா மீது பொய் புகார் அளித்து வழக்கு தொடர்ந்தது அம்பலமாகியுள்ளது. இதனிடையே குழந்தைகளின் கஸ்டடி உரிமையை வைத்துள்ள மோனிகாவுக்கு தான் பாஸ்போர்ட் வைத்து கொள்ளும் உரிமை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.