இளைப்பு நோய் தீர இம்பூரல்….!

November 21, 2022 at 6:30 am
pc
  • இம்பூரல் இலையைப் பொடி செய்து, அதனுடன் இரண்டு பங்கு அரிசி மாவு கலந்து அடைபோல் செய்து சாப்பிட்டால் இரைப்பு ஈளை குணமாகும்.
  • இம்பூரல் வேர், சுக்கு, அதிமதுரம் தலா-10 கிராம் எடுத்து தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை 60 மில்லி அளவுக்கு குடித்தால் சளி , இருமல் இரைப்பு போன்றவை தீரும்.
  • இம்பூரல் இலைச் சாறை (15 மில்லி) பாலில் கலந்து குடித்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
  • இம்பூரல் இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கை, கால் கழுவினால் எரிச்சல் தீரும்.
  • மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு மற்றும் இரத்த வாந்தி கட்டுபட பசுமையான இம்பூரல்ச் செடியை நன்கு கழுவி கைப்பிடியளவு எடுத்து, நீர் விட்டு விழுதாக அரைத்து 10 கிராம் அளவு 200 மிலி பாலில் கலந்து குடித்து வரவேண்டும். தினமும் இரு வேளைகள் இவ்வாறு செய்ய வேண்டும்.
  • வாயிலிருந்து இரத்தம் வடிகின்றதா? “இம்பூரலைக் காணாது இரத்தங்கக்கிச் செத்தானே ….” என்ற மருத்துவர் சட்டமுனி குறிப்பிட்டுள்ளார். இம்பூரலின் வேரைக் குடிநீராக்கி குடிக்க, வாயிலிருந்து இரத்தம் வடிதல் நிற்கும். இம்பூரல் மாத்திரைகளும் மருந்து கடைகளில் கிடைக்கின்றன. இவற்றையும் வாங்கி உபயோகிக்கலாம்.
  • இருமல் கட்டுபட இம்பூரல், வல்லாரை வகைக்கு 40கிராம் நசுக்கி ½ லிட்டல் நீரில் போட்டு 150மிலி ஆகக் காய்ச்சி 2 தேக்கரண்டி வீதம் காலை, மாலை வேளைகளில் குடித்து வரவேண்டும்.
  • மார்பு எரிச்சல் குணமாக இம்பூரல் இலைச்சாற்றை சம அளவு பாலுடன் கலந்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வரவேண்டும்.
  • சளி கட்டுபட வேரை நிழலில் உலர்த்தி, தூள் செய்து. 2 தேக்கரண்டி அளவு தூளைச் சிறிதளவு அரிசி மாவுடன் கலந்து, அடையாகத் தட்டிச் சாப்பிட்டு வர வேண்டும்.
  • உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் தீர இம்பூரல் இலைச்சாற்றை எரிச்சல் உள்ள இடங்களில் தடவி வரவேண்டும்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website