உங்க பணத்திமிர என்கிட்ட காமிகாதீங்க – அண்ணாச்சியை வெளுத்து வாங்கிய பிரபல முன்னணி நடிகை.
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருள் என்பவர் விளம்பரம் மற்றும் மீடியாக்களின் கண்களில் அதிகம் தென்படுகிறார். தனது கடைக்கு தானே விளம்பரத்தில் நடித்து அசத்தினார். இத னால் நெட்டிசன்கள் பலரும் அவரை காலாய்த்து தள்ளினாலும் அவர் அசராமல் ஹன்சிகாவுடன் விளம்பரத்தில் நடித்து பெஸ்ட்டு பெஸ்ட்டு என தன் கடையை பிரோமோட் செய்து வருகிறார்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் தி லெஜண்ட் என்று ஒரு திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த திரை ப்படத்திற்கு மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக முதலில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் தேர்வு செய்துள்ளார்கள். ஆனால், நடிகை நயன்தாரா இந்த படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று தெரிவித்து அவரை அவமானப்படுத்தியதாக கூறப்படுகின்றது.
அதன் பிறகு பாலிவுட் நடிகையை மற்றும் உ லக அழகியுமான ஐஸ்வர்யாராயை சரவணன் அந்த படத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்துள்ளார். அதற்காக பல கோடிகள் சம்பளம் கொடுக்கப் போவதாக கூறியும் அவர்நேரில் கூட பார்ப்பதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம். இந்தப் படத்தில் நடிகை ஊர்வசி ரௌட்டலாவை கதாநாயக பல கோடிகள் கொடுத்து புக் செய்துள்ளார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற சரவணா திரைப்படத்தின் ஆடியோ லான்ச் 10 கோடி ரூபாய் செலவு செய்து பிரம்மாண்டமாக உருவானது. மேலும், கிட்டத்தட்ட பத்து நடிகைகளுக்கு 6.5 கோடி மேல் பணம் கொடுத்து வர வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை கத்ரீனாகைஃப்விற்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்து புக் செய்துள்ளார். ஆனால் , கத்ரீனா வருவ தாக சொல்லி திடீரெ ன பணத் தை திருப்பிக் கொடுத்துவிட்டார். அதன்பிறகு மேலும் இரண்டு கோடி தருகின்றேன் என்று சரவணா கூறியதால் கத்ரீனா உங்கள் பணத்திமிரை என்னிடம் காட்டாதீர்கள் என்று சொல்லி அவரை அவமானப்படுத்தியுள்ளார். மேலும், இவர் பணத்தை காட்டி நடிகைகளிடம் பேசியதால் இப்படி ஒரு அவமானம் ஏற்பட்டதாகக் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.