உடலில் வெண்புள்ளிகள் தீர சித்த மருத்துவத் தீர்வுகள் என்னென்ன ..?
தோலின் எபிடெர்மிஸ் பகுதியில் உள்ள மெலனோசைட்ஸ் என்னும் செல்கள் தோலுக்கு நிறத்தை தருகின்ற ‘மெலனின்’ என்ற நிறமியை உருவாக்குகிறது. இந்த மெலனோசைட்ஸ் செல்கள் மெலனின் நிறமியை உருவாக்காமல் இருக்கும் நிலையை தான் ‘வெண்புள்ளி’ என்கிறோம்.
இதற்கான காரணங்கள்:
உடலின் நோய் எதிர்ப்பாற்றல், தவறுதலாக சொந்த செல்களை பாதிப்படைய செய்வதால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள மெலனோசைட்ஸ் மெலனின் நிறமியின் உற்பத்தியை நிறுத்துகிறது. இதை ‘ஆட்டோ இம்யூன்’ வகை எனக் கூறலாம். அடுத்து, வைட்டமின் பி குறைபாடுகள், தைராய்டு சுரப்பி நோய்கள், தீப்பட்ட காயங்களால் மெலனோசைட்ஸ் செல்கள் அழிவது போன்ற காரணங்களாலும் வெண்புள்ளி வருகிறது.
இதற்கான சித்த மருத்துவம்:
1) கார்போகரிசி பசையை வெண்புள்ளி உள்ள இடங்களில் பூசி சிறிது நேரம் வெயிலில் நிற்க வேண்டும்.
2) கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து காலை, இரவு ஒரு கிராம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.
3) கரிசாலை சூரணம் 1 கிராம், இருநெல்லி கற்பம் 100 மி.கி., அயபிருங்க ராஜ கற்பம் 100 மி.கி., பலகரை பற்பம் 200 மி.கி. ஆகியவற்றை மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும். சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா,