எவ்வளவு தான் சுத்தமா குளிச்சாலும், வியர்வை நாற்றம் மட்டும் கொறஞ்சபாடில்லையே என்றுகவலை படுறீங்களா…? உங்களுக்காக சூப்பரான டிப்ஸ் …
நாம் அனைவருமே நல்ல மணத்துடன் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். அதற்காக நன்றாக குளித்து விட்டு நல்ல வாசனைமிக்க டியோட்ரண்ட்டுகலை பயன்படுத்துவோம். ஆனால், அதில் உள்ள பாராபீன்கள் மற்றும் அலுமினியம் போன்ற கெமிக்கல்கள் உடலுக்கு பல வழிகளில் தீங்கு விளைவிப்பதாகும். அதுமட்டுமல்லாமல், சிலருக்கு டியோடரண்ட்டுகளை பயன்படுத்தினால், அக்குளில் அரிப்பு ஏற்படும், இதற்கு அதில் உள்ள கெமிக்கல் தான் காரணம்.
நாம் தினமும் நன்றாக தான் தேய்த்து குளிக்கிறோம், இருந்தாலும் பலருக்கு வியர்வை நாற்றம் மட்டும் போகவே போகாது. சரி, எப்படி தான் இதை போக்குவது என்ற யோசித்தால் அதற்கு சிறந்த தீர்வு இயற்கை வீட்டு வைத்தியங்கள். இந்த பொருட்கள் எல்லாமே உங்க சமலறையில் இருக்கும் அத்தியாவசிய இயற்கை மருத்துவ குணம் கொண்டவை.
வியர்வை நாற்றம் போக வீட்டு வைத்தியம்:
1. மணக்கும் மஞ்சளின் மருத்துவ குணம் ஏராளம். அந்த வகையில், மஞ்சள் கிழங்கை உரசி அக்குளில் தடவி வர வியர்வை நாற்றம் போயே போய்விடும்.
2. ஒரு பக்கெட் தண்ணீரில் தக்காளியை பிழிந்து அதை அக்குளில் பூசி சிறிது நேரம் விட்டு கழுவிடுங்க. கிருமிகள் நீங்கி வியர்வை நாற்றம் ஓடிப்போகும்.
3. பொதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை இருக்காது. நறுமணம் வீசும் புத்துணர்ச்சியுடன் நாள் முழுக்க இருப்பீர்கள்.
4. குளிக்க போகும் போது குளிக்கும் நீரில் எலுமிச்சை சாறை பிழிந்து குளித்தால் உடலில் இருக்கும் துர்நாற்றம் நீங்கும். அக்குளில் வெளிவரும் கெட்ட வாடையையும் போக்கும்.
5. ஆப்பிள் சீடர் வினிகரை சரிபாதியளவு தண்ணீரில் கலந்து, அதை அக்குள் மற்றும் அதிகம் வியர்க்கும் இடத்தில் பஞ்சை பயன்படுத்தி தடவி கழுவிடுங்க.
6. தேங்காய் எண்ணெயை பேக்கிங் சோடாவுடன் சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டை அக்குளில் தடவினாலும் வியர்வை நாற்றம் நீங்கும்.
7. கல் உப்பை வெதுவெதுப்பான நீரில் போட்டு, நன்கு கரைந்த பின் அந்நீரால் குளிக்க வேண்டும். இதனால் வியர்வை கட்டுப்படுவதோடு, உடல் துர்நாற்றமும் தடுக்கப்படும்.
8. கெட்டியான தயிரை குழைத்து அக்குள் மற்றும் வியர்க்கும் இடத்தில் பூசி குளித்து வந்தால் வியர்வை வெளியேறுவதுடன் சருமத்தின் அழகு அதிகரிக்கும்.
இதை எல்லாம் செய்து பாருங்கள். இதன் மூலம் சருமத் துளைகள் மூடப்பட்டு, அதிக வியர்வை உற்பத்தியாவது தடுக்கப்படும்.