ஒரே வாரத்துல உங்க பாத வெடிப்பு சரியாகணுமா ? இந்த பொருள் இருந்தா போதும் .!!
பெரும்பாலானோர் முகத்திற்கு கொடுக்கும் கவனிப்பை பாதங்களுக்கு கொடுக்க மறந்து விடுகிறார்கள். இதனால் தான் பாத வெடிப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், உடலில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் இந்த பிரச்சனை வருகிறது. நமது உடலில் மற்ற பகுதிகளை காட்டிலும் பாதம் விரைவில் வறண்டு விடும். அதனால், அதை பாதுகாப்பதும் நமது கடமையாகும். இந்த பாத வெடிப்பை போக்குவதற்காக கடைகளில் க்ரீம்கள் விற்கப்படுகின்றன. இருந்தாலும், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து க்ரீம் தயார் செய்ய முடியும். பாத வெடிப்பு குணமாக க்ரீம் எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.
பாத வெடிப்பு மறைய வீட்டு வைத்தியம்:
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் வெற்றிலைக்கு பயன்படுத்தும் சுண்ணாம்பு, இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இரண்டையும் எடுத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் க்ரீம் ரெடி. தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக விளக்கெண்ணெய் இருந்தால் கூட பயன்படுத்தி கொள்ளலாம்.
தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு, கால்களை 10 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து, பழைய டூத் பிரசால் பாதங்களில் இருக்கும் அழுக்கை நன்றாக தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
பின்னர் துணியால் பாதங்களை நன்றாக துடைத்துவிட்டு நாம் தயாரித்து வைத்த க்ரீமை பாத வெடிப்பு இருக்கும் இடத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே வைத்து, மறுநாள் காலை கால்களை கழுவிடுங்கள்.
இவ்வாறு இந்த முறையை தொடர்ந்து இரண்டு வாரங்கள் செய்து வந்தால் கால்களில் உள்ள பாத வெடிப்புகள் காணாமல் போய், மென்மையான பாதங்களை பெறலாம்.