கள்ளக்குறிச்சி பள்ளி உரிமையாளர் அறையில் ஆணுறைகள்… பெரும் பரபரப்பு ..!!

July 19, 2022 at 5:11 pm
pc

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் முதல்வர் அறையில் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக எழுந்த புகார்கள் குறித்து தனியார் பள்ளி சங்க பொது செயலாளர் கோபத்துடன் பேசியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில், கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி 12ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 13-ம் திகதி பள்ளி விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, உடலை வாங்காமல் உறவினர்கள் தொடர்ந்து 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், போராட்டத்தின்போது, பள்ளிக்கூடத்தை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள், ஒரு படுக்கையறைக்குள் ஆணுறைகள் இருப்பதாக வீடியோ வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியின் உரிமையாளர் அறை என கூறப்படும் அறையில் இருந்து தான் ஆணுறைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இது தொடர்பாக தனியார் பள்ளி சங்க பொது செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பள்ளி மீது ஏற்கனவே இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். மாணவர்களின் டிசிக்களை கூட தீ வைத்து உள்ளனர். இந்த சமூக விரோத கும்பல்களை கைது செய்ய வேண்டும். வரும் காலங்களில் எந்த கல்வி நிறுவனத்திலும் இது போன்ற வன்முறைகள் நடக்க கூடாது.

பள்ளி தாளாளர் அறையில் ஆணுறை இருந்ததாக வீடியோ வெளியானது குறித்து பேசிய அவர் நாங்கள் பார்த்தோமா? யாராவது போனவர்கள் கூட அங்கே ஆணுறையை போட்டு இருக்கலாம் தானே? வீடியோ எடுத்தவர்கள் ஆணுறையை போட்டு இருக்கலாம் தானே? தெரியாத விடயங்களை நாங்கள் பேச போவது இல்லை. விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது என கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website