கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட் குடித்து இளம்பெண் தற்கொலை -மனதை பதறவைக்கும் சம்பவம்!
உடல் எடை அதிகமாக இருந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்த பெண் தடயவியல் அதிகாரி ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் இந்த சம்பவம் சென்னை வடபழனியில் நடந்து உள்ளது
வடபழனி கருமாரியம்மன் கோவில் தெருவை சார்ந்த ரகுராமன் அவர்களுக்கு வயது 52 இவரின் மனைவி யுவராணி வயது 49 இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். யுவராணி தடயவியல் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீ ட்டில் கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிடை குடித்து விட்டு வாந்தி எடுத்துக் கொண்டே இருந்ததாகவும், இதனைக் கண்ட யுவராணியின் கணவர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
சிகிச்சை பெற்றுவந்த யுவராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வடபழனி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் யுவராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் யுவராணியின் உடல் எடை சற்று அதிகமாக இருந்ததாகவும், இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் மேலும், அவர் குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்ததாகவும் தெரியவந்தது. எனவே, அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்று வடபழனி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.