காரசாரமான கருவாடு கத்திரிக்காய் தொக்கு நீங்களும் சமைக்கலாம்….!

May 28, 2022 at 1:40 pm
pc

கருவாடு என்று சொன்னாலே நாவில் எச்சில் சுரக்கும். அதில் கருவடைக் கொண்டு செய்த உணவு என்றால், சொல்லவே தேவையில்லை.
மனம் அந்த உணவைச் சுற்றியே வட்டமிடும்; நாவும் கருவாடின் ருசியையே சுவைக்க ஏங்கிக் கொண்டிருக்கும்; நாவின் சுவை மொட்டுக்களோ மீண்டும் எப்பொழுது சுவைப்போம் என்று காத்துக் கொண்டிருக்கும்.
அப்படிப்பட்ட ருசியான கருவாடைக் கொண்டு. கருவாடு கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் – 200 கிராம்
சின்ன வெங்காயம் – கால் கிலோ
கருவாடு – 100 கிராம்
தக்காளி – 2 பெரியது
பச்சை மிளகாய் – 4
பூண்டு – 4 பல்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை , – சிறிது
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் – தாளிக்க( உங்களுக்கு தேவையான அளவு
எவ்வளவு நல்லெண்ணெய் செய்கிறோமோ அவ்வளவு சுவை கூடுதலாக இருக்கும்)
கடுகு, உளுந்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
செய்முறை :

  • கத்திரிக்காய், வெங்காயம், மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பூண்டை தட்டி வைக்கவும்.
  • கருவாட்டை நன்றாக மண் இல்லாமல் சுத்தமாக கழுவி சிறிய துண்டாக்கி கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு வெடித்தவுடன், கறிவேப்பிலை, மிளகாய், தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதம் கத்திரிக்காய், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
  • கத்திரிக்காய் பாதியளவு வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.
  • அடுத்து கருவாடு சேர்த்து சிம்மில் 10 நிமிடம் மூடி வைக்கவும்.
  • ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது மூடியை திறந்து கொத்தமல்லி இலை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கி பரிமாறவும்.
  • சுவையான கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் தொக்கு ரெடி.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website