கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட இளைஞரை திமுக கவுன்சிலரின் கணவர் அரிவாளுடன் விரட்டிய கொடுமை !வைரலாகும் வீடியோ…

August 11, 2022 at 1:54 pm
pc

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கவுன்சிலராக இருப்பவர் நித்தியா. திமுக கவுன்சிலாரான இவரது கணவர் வெற்றிச்செல்வன் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.

கொடுத்த பணத்தை கேட்டு குணசேகரன் என்பவர் வெற்றிச்செல்வன் வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது விரைவில் பணத்தை கொடுப்பதாக கூறிவிட்டு தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டதாக தெரிகிறது. மீண்டும் வெற்றிச்செல்வன் வீட்டிற்கு சென்ற குணசேகரன் வீட்டிற்கு வெளியே நின்று நித்தியாவிடம் கேட்டுள்ளார்.

அப்போது வீட்டில் இருந்துக்கொண்டே வெளியே வராத வெற்றிச்செல்வன் மனைவியை வைத்தே பஞ்சாயத்து பேசியதாக தெரிவிகிறது. அப்போது கொடுத்த கடனை திருப்பிக் கொடுக்க வலிக்கிறதா? எனக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெற்றிச்செல்வன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துவந்து தகாத வார்த்தையால் குணசேகரனை திட்டியதோடு ஓட ஓட விரட்டினார்

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் நித்தியா ஆகியோர் வெற்றிச்செல்வனை தடுக்க முயன்ற போதும் அதனை காதில் வாங்காத வெற்றிச்செல்வன் குணசேகரனை ஆவேசமாக துரத்தினர். அச்சமடைந்த குணசேகரன் அருகில் இருந்த சாலையில் தப்பியோடினார். 

இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக சிறுகனூர் காவல் நிலைய போலீசார் வெற்றிச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளுங்கட்சி கவுன்சிலரின் கணவர் பணம் கொடுங்கல் வாங்கல் பிரச்சனைக்காக ஒருவரை அரிவாளை கொண்டு தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website