கொரானா வைரசால் ஒருவர் 2ஆவது முறையும் பாதிக்கப்பட வாய்ப்பு.
கொரானா வைரசிற்காக தற்போது கொடுக்கப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலாற்றினாலும், அது நீண்டகாலம் நீடிக்க வாய்ப்பில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,
கொரானா வைரஸ் தொடர்பாக உலக மக்களிடையே அச்சத்துடன் பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன. இதில் முக்கியமாக ஏற்கனவே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டவர்களுக்கு, மீண்டும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற சந்தேகம் அதிகளவில் எழுந்துள்ளது.
இந்நிலையில், சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்தவர்களுக்கும் மீண்டும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக, சீனாவின் தேசிய சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.