கொரோனாவை விட ஆபத்தான வைரஸ்..
கொரோனா பெருந்தொற்றே இப்போது தான் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த பெருந்தொற்று குறித்து வல்லுநர்கள் வார்னிங் கொடுத்துள்ளனர். பிரிட்டனின் கொரோனா வேக்சின் டாஸ்க் போர்ஸ் தலைவராக இருந்த டேம் கேட் பிங்காம் என்பவர் இது குறித்து வார்னிங் அளித்துள்ளார். உலகில் அடுத்து ஏற்படும் தொற்று பாதிப்பால் 5 கோடி பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றால் 70 லட்சம் பேர் உயிரிழந்தனர். அதன் பாதிப்பே மிகவும் மோசமாக இருந்த நிலையில், இந்த புதிய நோய் பாதிப்பு அதை விட மோசமாக இருக்கும் என வார்னிங் கொடுத்துள்ளனர்.