சமந்தாவுக்காக கோடிகளை வாரியிறைத்த லிங்குசாமி… தனித்தீவில் சொகுசு கப்பல்!!கடன் பிரச்சனைக்கு காரணம் இதானாம்!

August 25, 2022 at 11:08 am
pc

நடிகை சமந்தாவுக்காக இயக்குநர் லிங்குசாமி கோடிகளை வாரியிறைத்த தகவல் வெளியாகியுள்ளது. 

ஹிட் படங்கள்

தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. மம்மும்டி, முரளி, அப்பாஸ், தேவையானி, ரம்பா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் செம ஹிட்டானது. இதனை தொடர்ந்து ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2 என பல படங்களை இயக்கியுள்ளார் லிங்குசாமி.

சிறை தண்டனை

தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து தி வாரியர் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனத்துடனான கடன் பிரச்சனையில், லிங்குசாமி மீது செக் மோசடி வழக்கு தொடரப்பட்டு அவருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை வழங்கியது.

அபராதம்

இதனை தொடர்ந்து இந்த தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று 10000 ரூபாய் அபராதம் செலுத்தினார் லிங்குசாமி. மேலும் மேல் முறையீடு செய்து சட்டப்படி சந்திப்போம் என்றும் கூறியிருந்தார். கடன் பிரச்சனை, சிறை தண்டனை, நீதிமன்றத்தில் அபராதம் என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் லிங்குசாமி.

சமந்தாவுக்காக..

இந்நிலையில் லிங்குசாமி நடிகை சமந்தாவுக்காக கோடிகளை வாரியிறைத்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2014ஆம் ஆண்டு சூர்யா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தை லிங்குசாமிதான் தயாரித்திருந்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு கைக்கொடுக்கவில்லை

தனித்தீவில் சொகுசு கப்பல்

அஞ்சான் படத்தில் ஒரு பாடலுக்காக ஒரு சொகுசு கப்பலை வாடகைக்கு எடுத்து தனித்தீவில் பிரம்மாண்டமாக பாடல் காட்சி ஒன்றை படம் பிடித்துள்ளார். இதற்காக கோடிகளில் செலவு செய்துள்ளார் லிங்குசாமி. ஆனால் அந்தப் பாடல் படத்தில் இடம்பெறவே இல்லை. அஞ்சான் படத்திற்கு பிறகுதான் கடன் பிரச்சனையில் சிக்கினாராம் லிங்குசாமி.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website