சரிகமப நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றுக்கு செல்லும் ஈழ குயில் கில்மிஷா!

September 1, 2023 at 11:08 pm
pc

சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த கில்மிஷா பாடி அசத்தி வரும் நிலையில், 100 சதவீதம் உத்தரவாதம் வைத்து நடுவர்கள் பைனலுக்கு செல்வார் என்று கூறியுள்ளனர். பிரபல தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை கடந்து 3ஆவது சீசனாக தற்போது நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் இலங்கை, இந்தியா என பல நாடுகளில் உள்ள சிறுவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு, ஆர்வமாக பாடிய வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை – யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஸா என்பவர் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிக் கொண்டிருக்கிறார். இவர் மட்டுமின்றி அசானி என்ற சிறுமியும் இதில் கலந்து கொண்டுள்ளார்.

கடந்த நாட்களில் கில்மிஷா பாடிய பாடல் அரங்கத்தையே கண்கலங்க வைத்துள்ளது. ஈழப்போரில் தனது தாய்மாமன் காணாமல் போன ஏக்கத்தில் அவரது தேடலை தனது பாடல் மூலம் வெளியிட்டுள்ளார்.

இந்த வாரம் கிலமிஷாவின் பாடல் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது. இதனை கேட்ட நடுவர்கள் பிரமித்து போனதுடன், கண்டிப்பாக பைனல் செல்ல உள்ளதாக கூறியுள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website