சாலையோரத்தில் கிடந்த மூட்டை! சென்னையை உலுக்கிய பயங்கர சம்பவம்

September 4, 2022 at 5:23 pm
pc

சென்னையில் தொழிலதிபரை கொன்று பிளாஸ்டிக் பையில் போட்டு வீசிய கொடூரம்

தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்துள்ளதா என பொலிசார் விசாரணை 

சென்னையில் தொழிலதிபரை கொலை செய்து, பிளாஸ்டிக் பையில் அடைத்து வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகன் தனது தந்தையை காணவில்லை என பொலிசில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் சின்மயா நகர் பகுதியில் பிளாஸ்டிக் பை ஒன்று கட்டப்பட்டு சாலையோரம் கிடந்தது. தூய்மை பணியாளர்கள் அந்த மூட்டையை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.

அதில் நபர் ஒருவரின் உடல் கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தது. உடனடியாக இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் அங்கு விரைந்தனர். பிளாஸ்டிக் பையை கைப்பற்றி பார்த்தபோது அதில் இறந்து கிடந்தது காணாமல் போன தொழிலதிபர் பாஸ்கர் என்பது தெரிய வந்தது. 

அதனைத் தொடர்ந்து பாஸ்கரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்துள்ளதா அல்லது பணம் பறிக்கும் நோக்கில் அவர் கடத்தி கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website