‘சிக்கன் கபாப்’-ல்காரம் கம்மியாக இருந்ததால் மனைவியை குத்தி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த கணவன்..!!

August 2, 2022 at 2:33 pm
pc

பெங்களூரு புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்(48), ஷாலினி(42) தம்பதி. சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த சுரேஷ் மனைவியிடம் ‘சிக்கன் கபாப்’ செய்து தருமாறு கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளார். பின்பு ‘சிக்கன் கபாப்’-ல் காரம் குறைவாக இருப்பதாக கூறி சண்டையிட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சுரேஷ், ஷாலினியை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளார். மேலும் கத்தியை கொண்டு ஷாலினியை குத்தியுள்ளார். 

ஷாலினியின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறைக்கு தகவலும் தெரிவித்தனர். இதனிடையே தனது மனைவியை தானே கொன்றுவிட்ட குற்ற உணர்ச்சியில், காவல்துறையில் மாட்டி விடக்கூடாது என்பதால் சுரேஷ் ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website