சிறையில் 44 கைதிகளுக்கு எய்ட்ஸ் தொற்று!

April 11, 2023 at 2:43 pm
pc

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்ட்வானி சிறையில் பெண் கைதி ஒருவர் உட்பட 44 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது சிறைக் காப்பாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதற்கான காரணங்கள் என்ன என்ற சர்ச்சை சிறை நிர்வாகத்தினரிடையே வெடித்துள்ளது . சிறையில் கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை, சுசீலா திவாரி மருத்துவமனையின் ஏஆர்டி மையத்தின் பொறுப்பாளரான டாக்டர் பரம்ஜித் சிங் உறுதிபடுத்தியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website