சீமான் விஜயலக்ஷ்மி விவகாரம்-தொடர் திருப்பம்.. கடைசியில் ஏமாந்து போனது யார் தெரியுமா?

September 17, 2023 at 11:29 am
pc

சீமான் விஜயலக்ஷ்மி விவகாரத்தில் தொடர்ந்து திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது அது குறித்து மீண்டும் நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

விஜயலக்ஷ்மி – சீமான் விவகாரம்

நாம தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலக்ஷ்மி தன்னிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், தன்னை கட்டாயப்படுத்தி 7 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் புகாரை அளித்திருந்தார். ஆனால் தற்போது அதிரடியாக தனது புகாரை நடிகை விஜயலக்ஷ்மி வாபஸ் பெற்றார்.

அது குறித்து தெரிவித்த அவர், வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை.புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என கூறி, சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

பயில்வான் கருத்து

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா விமர்சகரான பயில்வான் சீமான் – விஜயலக்ஷ்மி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் அளித்திருந்த தனியார் பேட்டியில், சீமான் மீது விஜயலட்சுமி புகார் அளிக்க காரணம், மாதம் மாதம் வந்து கொண்டிருந்த 50 ஆயிரம் ரூபாய் ஒரு கட்டத்தில் சீமான் அதனை நிறுத்திவிட, அதன் காரணமாக தான் தற்போது விஜயலக்ஷ்மி இந்த புகாரை அளித்துள்ளார் என தெரிவித்தார்.

சீமான்-விஜயலட்சுமி திருமணம் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என உறுதிபட கூறிய பயில்வான், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றிக் கொண்டால் அது திருமணம் ஆகாது என்றும் இந்த விவகாரத்தில் சீமான் கெட்டிக்காரத்தனமாக திட்டம் தீட்டியிருக்கிறார் என்றும் அதன் காரணமாக ஏமாற்றமடைந்து விஜயலட்சுமி என்றார்.மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றிய போட்டோ மட்டுமே இருக்கிறது என்றும் ஏன் பதிவு செய்யவில்லை? என வினவி, இது சீமானின் தந்திரம் என்றும் மாலை மாற்றியதும் யாராவது முதலிரவுக்கு ஏற்பாடு பண்ணுவாங்களா? என கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பினார்.

சீமானிடம் 4 முறை விஜயலக்ஷ்மி வந்து பணம் வாங்கியிருக்கிறார் என சுட்டிக்காட்டிய பயில்வான், பணத்தை தான் விஜயலட்சுமி தற்போதும் எதிர்பார்க்கிறார் என விமர்சித்து அவரோட நோக்கம் அது தான் என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் 70 சதவீதம் விஜயலட்சுமி தப்பு செய்திருக்கிறார் என்றும் 30 சதவீதம் சீமான் தப்பு செய்திருக்கிறார் என பயில்வான் அந்த பேட்டியில் கூறியுள்ளார். . 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website