சுந்தர்.சி பட நடிகை மரணம்!

May 8, 2024 at 8:08 am
pc

இயக்குனர் சுந்தர்.சியின் இருட்டு என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் மலையாள நடிகை கனகலதா. அவர் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்த நிலையில் தமிழில் சில படங்களில் நடித்து இருக்கிறார். பிரஷாந்த் நடித்த உனக்காக பிறந்தேன் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

கனகலதா கடந்த சில மாதங்களாக பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார்.

திருமணமாகி கணவரை பிரிந்துவிட்ட காரணத்தால் அவர் தனியாக தான் வாழ்ந்து வந்தார். அதன் பின் சகோதரி வீட்டில் வசித்து வந்திருக்கிறார்

இந்நிலையில் நேற்று இரவு அவர் வீட்டிலேயே உடல்நலக்குறைவால் மரணமடைந்து இருக்கிறார். அவருக்கு மலையாள சினிமா துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website