சுவையான ஜிகர்தண்டா சுலபமான முறையில் வீட்டிலேயே எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க …!!
தேவையான பொருட்கள்:
பாதாம் பிசின் – 5,
சர்க்கரை – 1 கப்,
பால் – 1 லிட்டர் + 1 கப்,
நன்னாரி சர்பத் – 3 ஸ்பூன்,
பால்கோவா – 200 கிராம்,
பிரஷ் கிரீம் – 1/2 கப்.
செய்முறை:
ஒரு சிறிய கப்பில் 5 துண்டுகள் பாதாம் பிசின் சேர்த்து, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 10 முதல் 12 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பின்னர் தனியே எடுத்து வைக்கவும். கேரமல் செய்வதற்கு ஒரு பேனில் 100 கிராம் சர்க்கரையை பரவலாக தூவி கொள்ளவும். குறைவான தீயில் வைத்து பொன்னிறமாகும் வரை வைக்கவும்.
பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். கொதித்த பின்னர் தனியே எடுத்து வைத்து ஆறவைக்கவும். ஐஸ்கிரீம் செய்வதற்கு ஒரு பிலண்டர் அல்லது மிக்சி ஜாரில் 100 கிராம் பால்கோவா சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 1/2 கப் பிரஷ் கிரீம் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் 2ஸ்பூன் கேரமல் சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக 1 கப் பால் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கொட்டி 2 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். 2 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் மிக்ஸியில் சேர்த்து அதனை 1 நிமிடத்திற்கு அரைக்கவும்.
நன்றாக அரைத்து பின்னர் மீண்டும் அதே டப்பாவில் ஊற்றி 6 முதல் 8 மணி நேரம் வரை ஃப்ரீஸரில் வைக்கவும். 6 மணி நேரத்திற்குப் பிறகு சுவையான ஜிகர்தண்டா ஐஸ் கிரீம் தயார். ஒரு பானில் 1 லிட்டர் பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து காய்ச்சவும். ஓரங்களில் இருக்கும் ஆடையை எடுத்து பாலுடன் சேர்த்து 1/2 லிட்டராக ஆகும் வரை சுண்ட காய்ச்சிக் கொள்ளவும். பின்னர் அதில் 1/2 கப் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
சர்க்கரை நன்றாகக் கரைந்த பின்னர் தயார் செய்து வைத்துள்ள கேரமல் 1/2 கப் சேர்த்துக் கொள்ளவும். 2நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அனைத்து விடவும். நன்றாக ஆறிய பின்னர் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பாதாம் பிசின், ஐஸ்கிரீம், கேரமல், பால் ஆகியவை தயாரானதும் ஒரு கிளாஸில் 2 மேஜைக்கரண்டி பாதாம் பிசின் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 2 மேஜைக்கரண்டி நன்னாரி சர்பத் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள பாலை சேர்க்கவும். அதன்மீது 1 கரண்டி ஐஸ்கிரீம் வைக்கவும். கடைசியாக அழகுக்காக சிறிதளவு கேரமல் சாஸ் ஊற்றவும். சுவையான மதுரை ஸ்பேஷல் ஜிகர்தண்டா தயாராகி விட்டது.