செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கிடந்த சடலம்: கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற மக்கள்!

October 30, 2023 at 7:36 pm
pc

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் பகுதி அருகே படுத்திருந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒருவர் இன்று காலை உயிரிழந்து கிடந்துள்ளார்.

அவர் தூங்கி கொண்டிருப்பதாக பொதுமக்கள் பலர் நினைத்துக்கொண்டு ஏராளமான பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட்டுகளைப் பெற்று வருகின்றனர்.அதனில் ஒருவர் அவர் அருகில் போய் பார்த்த போது தான் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது பற்றி ரயில்வே அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவம் குறித்து ரயில்வே பொலிஸ் மற்றும் செங்கல்பட்டு நகர பொலிஸாருக்கு தகவல் அளித்தும் 5 மணிநேரமாக சடலம் மீட்கப்படாமல் அந்த இடத்திலேயே இருந்திருக்கிறது.ரயில்வே மற்றும் நகர பொலிஸாருக்கு இடையே உள்ள எல்லைப் பிரச்சனை காரணமாக சடலத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.ரயில் நிலையத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website