சொந்த பேத்திக்கே பாலியல் தொல்லை.. திமுக கவுன்சிலரின் கணவர் மீது பரபரப்பு புகார்..!

November 14, 2022 at 6:50 pm
pc

சென்னை தண்டையார்பேட்டை மின்ட் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மனைவி வேளாங்கண்ணி. இவர் தண்டையார்பேட்டை திமுக 53வது வட்டம் கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில், 11 ஆம் வகுப்பு படித்து வரும் தனது மகளுக்கு மாமனார் பாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததாக மருமகன் சார்லஸ் பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சார்லஸ் கூறியதாவது; எனது மாமியார் வேளாங்கண்ணி தண்டையார்பேட்டை திமுக 53வது வட்டம் கவுன்சிலராக உள்ளார். அவரது கணவரான எனது மாமனார் பாண்டியன் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் பிரியதர்ஷினியிடம் புகார் கொடுத்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்காமல் கவுன்சிலரின் கணவன் என்பதால் அலட்சியம் காட்டுவதாக சார்லஸ் குற்றம்சாட்டினார். 

மேலும், தனது மாமனாரே சொந்த பேத்திக்கு பாலியல் சீண்டல் செய்து உள்ளது உண்மை என்று எனது மகள் கூறியும் கூட காவல்துறை நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன் எனவும் இந்த விவகாரம் குறித்து கேள்வி கேட்டால் பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளி விடுவேன் என்றும் தண்டையார்பேட்டை மகளிர் அணி காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி மிரட்டுகிறார்.

இதனால், புகார் குறித்து மகளிர் காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி மீதும், தனது திமுக கவுன்சிலரின் கணவரான பாண்டியன் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு மனித உரிமை ஆணையம் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளாக பாதிக்கப்பட்டவரின் தகப்பனார் சார்லஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website