ஜனாதிபதிக்குத் தெரியாமல் விளையாடும் அமைச்சர்!

November 6, 2023 at 6:43 pm
pc

இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பில் அரசாங்கத்திற்கோ அல்லது தமக்கோ எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இடைக்கால கிரிக்கட் குழுவொன்றை நியமித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.இடைக்கால கிரிக்கெட் குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி வழங்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.இன்று மாலை நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் இடைக்கால குழு நியமனம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கேட்க அமைச்சர்கள் பலர் தயாராகி வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பொதுவாக கிரிக்கெட் போன்ற நிறுவனங்களுக்கு இடைக்கால குழு நியமிக்கப்படும் போது ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் எனவும் ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சர் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website