ஜலதோஷம் ஏற்பட்டதால்,ஆவிப்பிடித்தபோது மாணவி உயிரிழப்பு..!

May 30, 2023 at 10:10 am
pc

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஜலதோஷத்துக்காக ஆவி பிடிக்க நினைத்த மாணவி, பானைக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரின் ஆத்தூர் அருகே உள்ள மேலசேர்ந்தபூமங்கலம் என்ற கிராமத்தில் தான் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மேலசேர்ந்தபூமங்கலத்தில் கோமதிநாயகம் என்பவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்தி ஆசிரியையாக உள்ளார்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அகல்யா, இளைய மகள் கௌசல்யா(18). இவர்களில் கௌசல்யா தனியார் தாதியார் கல்லூரியில் நர்ஸிங் படித்து வந்தார்.

தற்போது நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக கௌசல்யாவுக்கு ஜலதோஷம் ஏற்பட்டதால், வெந்நீரை பானையில் ஊற்றி மருந்து கலந்து ஆவிப்பிடித்தபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு வெந்நீரிலே மயங்கி விழுந்துள்ளார்.

தனது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக பானைக்குள் தலையை வைத்தபடியே இருந்துள்ளார்.

வீடு திரும்பிய மாணவியின் பெற்றோர் பானைக்குள் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கௌசல்யாவை மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் தனது உயிரை நீத்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்தனர். 

மாணவி இறப்பு குறித்து தகவல் அறிந்த பொலிஸார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website