தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுத்த தம்பதி! மாந்திரீக பூஜையில் நேர்ந்த கொடூரம்..அதிர்ச்சி

April 17, 2023 at 3:35 pm
pc

குஜராத் தம்பதியினர் மாந்தீரிக பூஜையிலிருந்த நம்பிக்கையால், தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாந்திரீக பூஜையின் நம்பிக்கை

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள விஞ்சியா என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதி (Hemu Makwana)ஹேமுபாய் மக்வானா (38) மற்றும் (hansa makwana)ஹன்சா மக்குவானா(35), இவர்களுக்கு  இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர்களுக்கு மாந்திரீக பூஜைகளில் நம்பிக்கை உள்ளதால், இருவரும் கடந்த ஓராண்டு காலமாக தங்கள் வீட்டில் தினமும் மாந்தீரிக பூஜைகளை செய்து வந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி அன்று நெருப்பு வளர்த்து பூஜை செய்த இந்த தம்பதியினர், மறு நாள் காலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராஜ்கோட் நகர காவல்துறை இது தொடர்பாக விசாரணையில் நடத்தியது.

தலையை வெட்டும் இயந்திரம் 

கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி அன்று ஹோமம் வளர்த்து, பின்னர் எந்திரத்தில் தலையை கொடுத்து தாங்களே அதை இயக்கி, தலையை துண்டாக்கி கொண்டு நரபலியாகியுள்ளனர்.

தலை உருண்டு சென்று குண்டத்தில் விழும் விதமாக ஸ்டாண்ட் ஒன்றை தாங்களாகவே செய்திருக்கிறார்கள். கயிற்றுடன் கூடிய கனமான இரும்பு மேடையின் கீழ் கூர்மையான ஆயுதம் பொருத்தப்பட்டிருந்தது, இது கமல பூஜை என அழைக்கப்படுகிறது.

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் கடிதம் ஒன்றிருந்திருக்கிறது. அதில் தங்கள் குழந்தைகளை உறவினர்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டுமென தம்பதியினரால் எழுதப்பட்டிருக்கிறது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தம்பதி தங்களை தாங்களே நரபலி கொடுத்த சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website