தனிமையில் இருந்த முதலை கர்ப்பம்; ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

June 8, 2023 at 9:13 pm
pc

அமெரிக்காவில் முதலை ஒன்று தானாக கர்ப்பம் அடைந்துள்ள தகவல் அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 16 ஆண்டுகளுக்கும் மேலாக தனிமையில் பராமரிக்கப்பட்டுவந்த முதலை ஒன்று எவ்வித சேர்க்கையும் இன்றி 10-க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டுள்ளது.

16 ஆண்டுகளாக தனிமையில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை தானே இனப்பெருக்கம் செய்யும் இந்த செயல்முறை கன்னி பிறப்பு என்று கூறப்படுகிறது.

இந்த செயல்முறை ஏற்கனவே ராஜ நாகம், வேளா மீன் போன்ற சில உயிரினங்களில் பார்த்தீனோஜெனிசீஸ் என்று அழைக்கப்படும் கன்னி பிறப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கன்னிப் பிறப்பு மூலம் முதலை ஒன்று தானே இனப்பெருக்கம் செய்து கருவுற்றுள்ளது.

இந்த கன்னிப் பிறப்பு தன்மை கொண்ட விலங்குகள், அவற்றின் சொந்த மரபணுப் பொருளை இணைக்கும் திறன் பெற்றவை என்றும், இதன் மூலம் கன்னிப் பிறப்பு நிகழ்வதாகவும் ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website