தற்கொலை செய்துகொண்ட பிரபல சின்னத்திரை நடிகை!

September 1, 2023 at 11:04 pm
pc

பிரபல நடிகை அபர்ணா நாயர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். தமிழ் சின்னத்திரை போல் மலையாள சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் அபர்ணா நாயர். இவர் வெள்ளத்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அபர்ணா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை 7:30 மணி அளவில் திருவனந்தபுரம் கரமனையில் இருக்கும் அவரது வீட்டில் தூக்கில் தொங்கியப்படி மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டிலிருந்த தாயும் அவரின் சகோதரரியும் அபர்ணாவை விரைந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

பரிசோதித்து பார்த்த மருத்துவர் அபர்ணா உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அவரின் உறவினர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றார்கள்.

விரைவில் தற்கொலைக்கான காரணம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களின் தகவல்களும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website