தலைக்கேறிய “ப்ரீ பயர்” மோகம்: தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

June 8, 2022 at 6:31 am
pc

தமிழகத்தின் கரூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நண்பர்கள் கேம் பாஸ்வேர்டை திருடிக்கொண்டதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்லைன் கேம் மீதான மோகம் சிறுவர்கள், இளைஞர்களை ஆட்கொண்டு வருகிறது. இதுபோன்ற விளையாட்டுகளில் மூழ்கும் இளைஞர்கள் சில சமயங்களில் விபரீத முடிவை எடுத்து விடுகின்றனர்.

இதைபோன்ற ஒரு சம்பவம் தான் கரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. கரூர் சிவசக்தி நகரை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர், “ப்ரீ பயர்” என்ற ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த இளைஞரின் ப்ரீ பயர் விளையாட்டின் User ID மற்றும் பாஸ்வேர்டை அவரது நண்பர்கள் திருடியுள்ளனர். இதனை அறிந்த அந்த இளைஞர் அதிர்ச்சியும், விரக்தியுமடைந்துள்ளார்.

பின்னர் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார். கேம் பாஸ்வேர்டை திருடிக் கொண்டதற்காக இளைஞர் தற்கொலை செய்துகொண்ட விடயம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website