தீவிரம் அடைந்த வடகிழக்கு பருவமழை: 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

December 3, 2023 at 9:39 am
pc

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும்.

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடலில் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, தேனி ஆகிய 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website