தேசிய மொழியாகிறாதா சமஸ்கிருதம்? அதிரடி தீர்ப்பு

September 2, 2022 at 4:00 pm
pc

சமஸ்கிருத மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் வழக்கறிஞருமான கேஜி வன்சாரா பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதில், “சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், இது குறித்து விவாதிக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம்தான், நீதிமன்றம் அல்ல என்றும் கூறியுள்ளனர். “இது கொள்கை சார்ந்த விஷயம் அதை எங்களால் மாற்ற முடியாது. உங்கள் விளம்பரத்திற்காக எங்களால் மனுவை விசாரிக்க முடியாது” என்றும் காட்டமாக கூறியுள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website