த்ரிஷாவை சந்திக்க கார்த்தி விருப்பம்.. யோசித்து செய்தி அனுப்புவதாக த்ரிஷா பதில்..!

March 20, 2023 at 5:06 pm
pc

நடிகை த்ரிஷாவை சந்திக்க கார்த்தி விருப்பம் தெரிவித்த நிலையில் ’யோசித்து செய்தி அனுப்புவதாக த்ரிஷா பதில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ’அகம் நக’ என்ற பாடல் இன்று வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ’இளைய பிராட்டியாரே’ என த்ரிஷாவின் ட்விட்டர் அக்கவுண்ட்டை டேக் செய்து தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் தெரிவித்த த்ரிஷா ‘என்ன வாணர்குல இளவரசே’ என்று கூறியிருந்தார். அதற்கு கார்த்தி, ‘தங்களை தரிசனம் செய்ய விருப்பம்’ என தெரிவித்திருந்த நிலையில் ’ம்ம்ம்.. யோசித்து செய்தி அனுப்புகிறேன்’ என த்ரிஷா பதில் தெரிவித்துள்ளார். 

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இளைய பிராட்டி குந்தவி தேவி கேரக்டரில் த்ரிஷாவும், வாணர்குல இளவரசர் வந்தியத்தவன் கேரக்டரில் கார்த்தியும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website