நடிகர் பிரசாந்த் மீது பரபரப்பு புகார்
இலங்கையைச் சேர்ந்த குமுதினி என்ற பெண், சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் இரு தினங்களுக்கு முன்பு சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில், நடிகர் பிரசாந்த் தன்னிடம் ரூபாய் 10 லட்சம் பண மோசடி செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நடிகர் தியாகராஜனின் உதவியாளர் ஆனந்த் என்பவர், குமுதினி பொய்யான புகார் அளித்திருப்பதாகவும் மூன்று முறை, தங்களது வீடு தேடி வந்து பிரச்னையில் ஈடுபட்டதாகவும், அதே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருதரப்பு புகார்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் புகார் அளித்த பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. இந்தப் புகார் குறித்து பிரசாந்த் தரப்பில் கேட்டபோது, அந்த பெண் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என மறுத்துவிட்டனர்.