நிர்வாணமாக போஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் !!நடிகர் ரன்வீர் சிங் மீது போலீசில் புகார்…

July 26, 2022 at 12:50 pm
pc

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பத்திரிகை ஒன்றுக்காக ஆடையில்லாமல் போஸ் கொடுத்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. புகைப்படங்களை பார்த்த சமூக வலைதளவாசிகள் ரன்வீர் சிங்கை கலாய்த்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டனர். மேலும் ரன்வீரை விளாசவும் செய்தார்கள்.

புகார்

ஆடையில்லாமல் போஸ் கொடுத்ததன் மூலம் பெண்களின் உணர்வுகளை காயப்படுத்திவிட்டார் என்று ரன்வீர் சிங் மீது மும்பை சேம்பூர் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மும்பை பகுதியில் இருக்கும் என்.ஜி.ஓ.வை சேர்ந்த அதிகாரி ஒருவர் தான் புகார் அளித்திருக்கிறாராம். ரன்வீர் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீபிகா

ரன்வீர் சிங் தன் காதல் மனைவியான நடிகை தீபிகா படுகோனுக்கு தெரியாமல் தான் பிறந்தமேனியாக போஸ் கொடுத்திருக்கிறார் என்று சமூக வலைதளவாசிகள் கிண்டல் செய்தார்கள். ஆனால் ரன்வீர் இப்படி செய்யப் போவது தீபிகாவுக்கு ஏற்கனவே தெரியுமாம். மேலும் தன் கணவரை ஊக்குவித்தார் தீபிகா என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

பாராட்டு

ரன்வீர் சிங் இப்படி ஆடையில்லாமல் போஸ் கொடுத்ததை பார்த்த பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் அவரை பாராட்டினார். மேலும் நடிகைகள் ஆலியா பட், ஸ்வரா பாஸ்கர், ராக்கி சாவந்த் ஆகியோர் ரன்வீர் சிங்கை பாராட்டினார்கள். கெரியரை பொறுத்தவரை ஆலியாவுடன் சேர்ந்து ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்தில் நடித்து வருகிறார் ரன்வீர் சிங்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website