பள்ளி கழிவறையில் +1 மாணவிக்கு குழந்தை!!அதிர்ச்சி சம்பவம்

September 5, 2022 at 8:20 am
pc

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1-ம் தேதி மாலை சில மாணவிகள்கழிவறைக்கு சென்றனர். அப்போது கழிவறை அருகே உள்ள சுவர் பகுதியில் குழந்தை சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மாணவவிகள் உடனடியாக ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர், தலைமை ஆசிரியர் புவனகிரி போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி காவல் நிலைய ஆய்வாளர் சரஸ்வதி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்ததோடு, பச்சிளங்குழந்தையிடன் சடலத்தை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில், பிறந்து சுமார் 1 மணிநேரம் மட்டுமே ஆன குழந்தை என்பதால் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர்(DSP) ரமேஷ்ராஜ் ஆய்வு செய்ததோடு விசாரணையை துரிதப்படுத்தினார்.

போலீசார் விசாரணையில் அதே பள்ளியில் படிக்கும் +1 மாணவி ஒருவருக்கு இந்த குழந்தை பிறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த சிறுமியிடம் தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், தம்பி உறவுமுறை கொண்ட 10-ம் வகுப்பு மாணவர் ஒருவருடன் நெருங்கி பழங்கியபோது குழந்தை உருவாகியுள்ளது தெரியவந்தது.

பின்னர், அந்த கர்ப்பத்தை பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த மாணவி பள்ளி கழிவறையில் குழந்தை பிறந்ததும் அதனை என்ன செய்வதென்று தெரியாமல் புதறில் வீசிவிட்டு சென்றபோது அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த வழக்கில் இருவரும் 18 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website