பிரபல உணவகத்தில் வாடிக்கையாளருக்கு நேர்ந்த கொடூரம்!

August 25, 2023 at 9:18 pm
pc

தமிழகத்தில் உள்ள பிரபல உணவகத்தில் ஆர்டர் செய்த சிக்கனில் துர்நாற்றம் வீசியதால், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு வாடிக்கையாளர் புகார் அளித்துள்ளார். சென்னை நொளம்பூர் பகுதியில் பிரபலமான பாண்டியன் அசைவ உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு சாப்பிடுவதற்காக வாடிக்கையாளர் ஒருவர் சென்றுள்ளார்.

அவர், அங்கு சிக்கன் ரைஸ் மற்றும் சிக்கன் தந்தூரியை ஆர்டர் செய்துள்ளார். பின்னர், ஆர்டர் செய்த உணவு வந்த பிறகு வாடிக்கையாளர் சாப்பிட முயன்றுள்ளார்.

அப்போது, அந்த சிக்கன் உணவிலிருந்து ஒரு விதமான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் ஹோட்டல் மேலாளரிடம் தகராறில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், உணவுகளை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.

பின்னர், கெட்டுப்போன உணவை உணவு ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் வாடிக்கையாளர் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல அசைவ உணவகத்தில் கெட்டுப்போன உணவுகள் வழங்கியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website