பீல்டிங் செய்யும்போது ஏற்பட்ட பலத்த காயம் ..! சென்னை அணியில் இருந்து விலகும் ரவீந்திர ஜடேஜா….

May 11, 2022 at 6:40 pm
pc

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் தொடரில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஜடேஜா தலமையில் களமிறங்கிய சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. இதனால், விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை என தோனியிடமே கேப்டன் பதவியை கொடுத்தார்.

தொடர்ந்து, சென்னை அணியில், சொதப்பி வரும் ஜடேஜா ஆட்டமும் சிறப்பாக இல்லை. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரு துறைகளிலும் சொதப்பினார்.

இதுவரை 116 ரன்களை மட்டுமே எடுத்த அவர், வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

பீல்டிங்க் அசத்தும் அவர் அதிகமான கேட்சுகளை விட்டார். அதன் பின்னர் பெங்களுரு அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்யும்போது காயமடைந்தார்.

அவருடைய காயம் கொஞ்சம் கவலைக்குரிய வகையில் இருந்ததால் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவில்லை. அவருடைய காயம் குணமடைந்துவிடும் என மருத்துவர்கள் கணித்தனர்.

ஆனால், காயம் குணமாகவில்லை. இதனால், நாளை நடைப்பெறும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க மாட்டார் எனக்கூறப்படுகிறது.

காயம் குணமாக சில நாட்கள் ஆகும் என்பதால் மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளார்களாம். இதனால், ஐபில் தொடரில் இருந்து முழுமையாக வெளியேறவும் வாய்ப்புள்ளதாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website