புதிய சட்டம் !!தண்ணீரை வீணாக்கினால் ரூ.5000 அபராதம்
கோடையில் தண்ணீர் வீணாவதை தடுக்க பெங்களூருவில் உள்ள வீட்டு வசதி சங்கம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. குடியிருப்பாளர்கள் யாராவது அதிக தண்ணீர் பயன்படுத்தினால் அவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. வைட்ஃபீல்டில் உள்ள பாம் மெடோஸ் ஹவுசிங் சொசைட்டி அதன் அறிவிப்புகளில், பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் தண்ணீர் பயன்பாட்டைக் கண்காணிப்பார்கள் என்று கூறியது.