பெண் போலீசுக்கு கத்தி குத்து.. அதிர்ச்சி சம்பவம்!

சென்னை: ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் போலீஸ் ஆசிர்வா நேற்று இரவு 9 மணி அளவில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது ரயில் புறப்படும் நேரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் பெண்கள் பெட்டியில் ஏற முயன்றுள்ளார். அவரை ஆசிர்வா கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த நபர் மறைத்து வைத்திருந்ந்த கத்தியை எடுத்து பெண் போலீசின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்தி தப்பி ஓடி விட்டார். பயணிகள் அளித்த தகவலின் பேரில் பெண் போலீஸ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.