பெரியார் ஏன் இரண்டாம் திருமணம் செய்தார் தெரியுமா?

September 19, 2023 at 7:23 pm
pc

பெரியார் இறந்து ஏறத்தாழ 50 ஆண்டுகள் கலந்துவிட்டன. சமூகத்திற்காக அவர் எண்ணற்ற சேவைகள் செய்திருப்பினும், விவாதம் என்று வரும் பொழுது, இன்றளவிலும் பெரியார் மற்றும் 

உண்மையில் பெரியாருக்கும் மணியம்மைக்கும் இருந்த உறவு தான் என்ன? நிஜமாகவே மணியம்மை பெரியாரின் தத்து மகளா? வெறுமனே துணைக்காக மட்டுமா மூப்படைந்த வயதில் பெரியார் மணியம்மையை மணந்தார்?

பெரியார் மணியம்மையை ஏன் மணந்தார் என்பதற்கான உண்மையான காரணங்கள் பலமுறை, பலவிதமான ஊடகங்களில் எடுத்து உரைக்கப் பட்டிருந்தாலும், இன்றும் இந்த டிஜிட்டல் யுகத்தில்… உண்மை காரணத்தை மறைக்கும் அளவிற்கு, போலி காரணங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதற்காகவே, மீண்டும் ஒருமுறை, பெரியார் – மணியம்மை திருமணத்தின் உண்மையை காரணத்தை எடுத்துரைக்க வேண்டியது கட்டாயமாகிறது.

இன்றளவிலும் சமுக ஊடகங்களில், முக்கியமாக எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பெரியாரை எதிர்ப்பவர்கள் தங்களது வாதத்தை துவங்கும் போது, ‘பெண்ணுரிமைக்காக போராடியவர் செய்யும் காரியமா இது?’, ‘எப்படி ஒருவரால் தனது தத்து மகளை திருமணம் செய்துகொள்ள முடித்தது’, என தொடங்கி, இன்னும் சிலர் மிக கீழ்த்தரமாக கூட பதிவிடுவது உண்டு.

​கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திய பெரியார் – மணியம்மை திருமணம்:

ஜூலை 9ம் நாள் 1949ல் தனது 70 வயதில் பெரியார் தனது வீட்டில், தனக்கு உதவியாளராக, பராமரிப்பாளராக இருந்த 32 வயது மணியம்மையை திருமணம் செய்து கொண்டார். பெரியாரின் இந்த திருமணம் பொது மக்கள் மட்டுமின்றி, அவரது கட்சியில் இருந்தோர் இடையேயும் பல எதிர்மறை கருத்துகள் எழ காரணமானது. பெரியாரை தலைவராக ஏற்ற அண்ணாதுரை அவர்கள் கூட, பெரியாரின் இந்த செயலை ஏற்கமுடியா நிலையில் இருந்தார்.

பெரியாரின் நீதிக்கட்சியில் இருந்த கனகசபாபதி என்பவற்றின் மகள் தான் மணியம்மை. (நீதிக்கட்சி பின்னாளில் திராவிட கழகமாக மாறியது.) பெரியாரின் சுய மரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு திராவிட கழகத்தில் தன்னை இணைந்துக் கொண்டவர் மணியம்மை.

மணியம்மையின் 20களில் கனகசபாபதி மரணம் அடைந்தார். திருமணத்தில் ஈர்ப்பில்லாத மணியம்மை, இயக்கத்தில் முழுமையாக தன்னை இணைத்துக் கொண்டு செயற்பட துவங்கினார். தனது செயற்பாடுகளால் பெரியாரின் நம்பகத்தன்மையை பெற்ற தொண்டர்களுள் ஒருவராக உருவானார் மணியம்மை.


வயது மூப்பு காரணமாக, ஓயாத சுற்றுப்பயணங்கள், பல்வேறு ஊர்களில் மேடை நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்து வந்த காரணங்களால் பெரியாருக்கு உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார். அச்சமயத்தில் பெரியாரின் பராமரிப்பாளராக இருந்து பணிகள் செய்து வந்தார் மணியம்மை.

பிற்காலத்தில் பெரியாரின் அரசியல் வாரிசாகவும் உருவெடுத்தார். அச்சமயத்தில், பிறரை காட்டிலும் தனது சமூக பணிகளை பின்தொடரவும், சொத்துகளை சரியாக அறக்கட்டளை சமூகப் பணிகளுக்கு உபயோகப்படுத்த முறையான நபராக மணியம்மை இருப்பார் என நம்பினார் பெரியார்.

சட்டசிக்கல்களை எதிர்கொள்ள பெரியார் எடுத்த முடிவு தான், இரண்டாம் திருமணம்:

1949ல் மணியம்மையை பெரியார் திருமணம் செய்ததற்கு ஒரே காரணம், (அன்றைய சட்டத்திற்கு ஏற்ப) தனது லீகலான சட்ட வாரிசாக மணியம்மையை நியமிப்பதற்காக மட்டுமே. பெரியார் நினைத்ததன் படியே, அவரது மறைவிற்கு (1973) பிறகு, மணியம்மை அவர்கள் திராவிட கழகத்தின் தலைவராக 4 ஆண்டுகள் பொறுப்பு ஏற்று செயற்பட்டு வந்தார்.

‘நான் மணியம்மையை மணந்ததற்கு காரணம், சட்டப்படி என் சொத்திற்கு ஒரு சரியான வாரிசாக மணியம்மையை நியாப்பதற்காக மட்டுமே’ என பெரியாரே விளக்கம் அளித்திருந்தார். மேலும், வாரிசாக ஒருவரை நியமிக்க அன்றிருந்த சட்ட சிக்கல்களும் பெரியார் மணியம்மையை திருமணம் செய்து சட்ட பூர்வமான வாரிசாக நியமிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

​மணியம்மை, அன்னை மணியம்மை ஆனது எப்படி? எப்போது?

பெரியார் மறைவிற்கு பிறகு திராவிட கழகத்தில் சறுக்கல் ஏற்பட்டது. அப்போதும் மணியம்மை பெண்களுக்கான சமூக போராட்டங்களில் ஈடுபட்டு கொண்டே இருந்தார். பிரபல தமிழ் கவிஞர் பாரதிதாசன் அவர்கள், தன்னை விட மணியம்மை 25 வயது இளையவராக இருப்பினும், ‘அன்னை’ என அழைத்து பெருமை சேர்த்தார். அதன் பிறகு, மணியம்மை அவர்களை அன்னை மணியம்மை என பரவலாக அனைவரும் அழைக்க துவங்கினர்.

பெரியார் இரண்டாவதுதாக திருமணம் செய்து கொண்டார் என்றே ஒரே காரணத்தினால் மணியம்மை-க்கு முழுமையாக சேர வேண்டிய பெயரும் புகழும் இருட்டடிக்க பட்டுள்ளது என்றே கூற வேண்டும். ஆங்கிலத்தில் பரவலாக கூறப்படும் ‘Underrated’ என்பதை இங்கே குறிப்பிடுவது சரியாக இருக்கும். தமிழக பெண் தலைவர்களுள் மணியம்மை 

அந்த திருமணம் பெரியார் – மணியம்மை இருவரின் சம்மதத்துடன் நடந்த நிகழ்வு. பெரியாரை திருமணம் செய்து கொண்ட போது மணியம்மை சிறு பிள்ளை அல்ல. 32 வயது நிரம்பிய மணியம்மைக்கு போதிய அறிவும், முதிர்ச்சியும், அரசியல் மற்றும் சமூக போராட்ட அனுபவமும் நிறைந்திருந்தார் என்பது யாராலும் மறுக்க முடியாது.

ஆக, பெரியார் – மணியம்மையின் திருமணத்தின் இந்த உண்மையான பின்னணி காரணம் அறிந்தும் சில அமைப்புகள், சில So Called தலைவர்கள் பெரியார் பெயரை இழிவுப்படுத்த மணியம்மை உடனான திருமணத்தை உபயோகிப்பது, அவர்களின் அரசியல் அறிவின்மையை மட்டுமே வெளிப்படுத்துகிறது.


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website